Home » , , , , , , » மீனவர்கள் போராட்டத்தை கைவிட்டனர்

மீனவர்கள் போராட்டத்தை கைவிட்டனர்

தமிழக மீனவர்கள் மேற்கொண்டு வந்த பணிப்பகிஸ்கரிப்பு போராட்டம் கைவிடப்பட்டுள்ளது.


புதுக்கோட்டை, நாகபட்டிணம் மற்றும் காரைக்கால் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த மீனவர்கள் இந்த போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.இலங்கையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த தமிழக மீனவர்களையும், படகுகளையும் விடுவிக்குமாறு கோரி இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தது.

எனினும் இலங்கையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 66 தமிழக மீனவர்கள் விடுவிக்கப்பட்டிருந்த நிலையில், இந்த போராட்டம் கைவிடப்பட்டுள்ளது. எவ்வாறாயினும் அவர்களின் படகுகள் விடுவிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Share this video :

0 comments:

Post a Comment

 
Support : Creating Website | WORLDNEWSLK | WORLDNEWSLK
Copyright © 2013. newstamil - All Rights Reserved
Template Created by Creating Website Published by WORLDNEWSLK
Proudly powered by Website